Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அண்ணாமலை நலம் பெற வேண்டி ... புரட்டாசி பொங்கல் விழாவில் புரவி எடுப்பு ; பக்தர்கள் பரவசம் புரட்டாசி பொங்கல் விழாவில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா; அக். 15ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா; அக். 15ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 அக்
2023
11:10

உடன்குடி: குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 24ம் தேதி மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதை முன்னிட்டு வரும் 14ம் தேதி காலை11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது. வரும் 15ம் தேதி காலை 5 மணிக்கு கொடிபட்டம் திருவீதி உலா, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.  திருவிழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 10ம் திருநாளான 24ம் தேதி இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன் எழுந்தருளி மகிஷாசூரசம்ஹாரம் செய்தல் நடக்கிறது. 25ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை, 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வருதல், காலை 5 மணிக்கு அபிஷேக, ஆராதனை, 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டு மாலை 4 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தவுடன் 4.30 மணிக்கு காப்பு களைதல் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மனுக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. விரதம் இருந்து காப்பு கட்டி வேடம் அணிந்த பக்தர்கள்மகிஷாசூர சம்ஹாரம் முடிந்த பின் அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் வரை காத்திருக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லலாம். அம்மனுக்கு காப்பு அவிழ்க்கும் நேரத்தை தெரிந்து கொண்டு அவரவர் சொந்த ஊர்களில் உள்ள கோயில்களில் காப்பு அவிழ்த்துக் கொள்ளலாம். நெரிசலை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த படிக்கட்டுகள் சேதமடைந்து கிடப்பதால் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar