‘அ’னா … ‘ஆ’வன்னா… ; அக்.24ல் தினமலர் வித்யாரம்பம் நிகழ்ச்சி முன்பதிவு தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2023 12:10
மதுரை: தினமலர் மாணவர் பதிப்பு, மஹன்யாஸ் இணைந்து வழங்கும் ‘அ’னா … ‘ஆ’வன்னா… அரிச்சுவடி ஆரம்ப நிகழ்வு மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் அக். 24 காலை 9:00 முதல் 11:30 மணி வரை நடக்கிறது. கல்விக்கடவுள் சரஸ்வதியை வழிபடும் நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம். அக். 24 விஜயதசமி. அன்றைய தினம் குழந்தைகளுக்கு கல்வி, கலைகள் கற்பிப்பதற்கான துவக்கநாள். விஜயதசமி திருநாள் வித்யாரம்பத்துக்கு உகந்தநாள். மதுரையில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் அக். 24 காலை 9:00 முதல் 11:30 மணி வரை வித்யாரம்ப திருநாள் நடக்கிறது. உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்க இரண்டரை முதல் மூன்றரை வயது குழந்தைகளை அழைத்து வரலாம். உங்கள் மழலையர் கல்விக் கோயிலுக்குள் அடியெடுத்து வைப்பதற்கான முதல் அடியை தினமலர் மாணவர் பாதிப்பு, மஹன்யாஸ் எடுத்து வைக்கின்றன. அனுமதி இலவசம். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தினமலர் நாளிதழ் இலவசமாக வழங்குகிறது. இந்நிகழ்ச்சியை ஆனந்தா அன்ட் ஆனந்தா, ஸ்ரீ நர்ஸிங் ஸ்வீட்ஸ் லிமிடெட், அருணாச்சலா அரிசிக்கடை அன்ட் ஓட்டல் இணைந்து வழங்குகின்றன. குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, அலைபேசி எண் குறித்த விவரங்களை 81909 09409ல் இன்று காலை 10:00 முதல் மாலை 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.