ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும் : கோமடம் சுவாமிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2023 04:10
அனுப்பர்பாளையம்: ஸ்ரீ கவ்மாடாறியா டிரஸ்ட் மற்றும் ஜெய ஸ்ரீ டேப்ஸ் சார்பில், ஸ்ரீ மத் வால்மீகி ராமாயண ஆன்மிக சோற்பொழிவு அனுப்பர்பாளையம் புதூர் சாமிநாத புரத்தில் கடந்த 7 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில், மதுரை அழகர் கோயில் கோமடம் சுவாமிகள் பேசியதாவது : பறவையை வீரட்டி சென்று பிடிக்க முடியாது. வலையை விரித்துதான் பிடிக்க வேண்டும். அதுபோல், பகவான் ராமரை பிடிக்க ராமாயானம் என்ற ஆம்மிகத்தை படிக்க வேண்டும். ராமாயானத்தை எத்தனை தடவை படித்தாலும் அலுப்பு ஏற்படாது. இன்பம் தான் ஏற்படும். அதுபோல் அதனை கேட்டால் மனதில் உள்ள குறைகள் மறைந்து போகும். சாத்வீக குணம் படைத்தவர் விஷ்ணு, வேத முதல்வன் கண்ணன் தான். அவனை நினைத்தால் மங்கலம் உண்டாகும். விஷ்ணு என்றால், அனைத்து இடங்களிலும் நிறைந்தவர் என்று அர்த்தம். பகவான் என்றாலே நாராயணன் தான். அது வேறு யாருக்கும் பொருந்தாது. அவர் இல்லாத இடம் இல்லை. எல்லா இடத்திலும் உள்ளார். ராமரை போல் வாழ கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.