பாரம்பரிய புரட்டாசி பொங்கல் விழா; விவசாயம் செழிக்க வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10அக் 2023 04:10
மேலுார்; மேலூர், சூரக்குண்டில் உள்ள சின்னடைக்கி, பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நடைபெற்றது. இன்று மதியம் கிராம மக்கள் மந்தையில் ஒன்று கூடினர். பின்னர் கிராம அம்பலகாரர்கள் முன்னே நடந்து செல்ல பெண்கள் பொங்கல் வைப்பதற்கான பூஜை பொருட்களை பித்தளை பானையிலும், மாவிளக்கு வைப்பதற்கான பூஜை பொருட்களை சில்வர் சட்டியிலும் தலையில் சுமந்து 2 கிமீ தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிடாவெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இவ் விழாவில் சூரக்குண்டு மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுவாமி வழிபாடு செய்த போது லேசான சாரல் மழை பெய்து குளிர்வித்தது குறிப்பிடதக்கது.