பதிவு செய்த நாள்
10
அக்
2023
04:10
அவிநாசி;அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், மழைச்சோறு எடுத்து வழிபாடு நடந்தது.
கிராம பொதுமக்கள் ஒன்று திரண்டு அரிசி கஞ்சி, கம்பங்கூழ் தயாரித்து மாரியம்மனுக்கு படைத்து, அனைவருக்கும் வழங்கினர். இவ்வாறு வழிபாடு செய்தால், மழை வருமென ஐதீகம். கிராமப் பகுதிகளில் மழை பெய்வதற்காக, பிள் ளையார் செய்து, அலங்க ரித்து முக்காலியில் வைத்து கன்னிப்பெண்கள் அதனை ஊருக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மாரியம்மனிடம் மழை வேண்டி வழிபாடு செய்வர். அதன்பின், அரிசி கஞ்சி, கம்பங்கூழ் ஆகியவற்றை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவர், இந்த வினோத வழிபாட்டால் ஊருக்குள் மழை பெய்து பஞ்சம், பசி, பட்டினி இல்லாமல் தானியங்கள் விளைச்சல் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். அதனடிப்படையில், நாங்கள் பல ஆண்டுகளாக இந்த வழிபாடு செய்கிறோம். மழையும் வந்து விடுகிறது என்றனர். வழிபாடு முடிந்த சற்று நேரத்தில், புதுப்பாளையம் வட்டாரத்தில் நல்ல மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.