திருக்கோவிலூர் தபோவனத்தில் நவராத்திரி விழா கடஸ்தாபனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2012 11:10
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்தா தபோவனத்தில் சரத் நவராத்திரி விழா நேற்று கடஸ்தாபனத்துடன் துவங்கியது.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா தபோவனத்தில் 10 நாள் சரத் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. காலை 8 மணிக்கு வேதவிற்பன்னர்களின் மந்திரங்கள் முழங்க, கடஸ்தாபனம் நடந்தது.இன்று முதல் 24ம் தேதி வரை தினசரி அதிகாலை 5.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீ சக்ர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்ரி மண்டபத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை, ஸ்ரீ ஞானாம்பிகைக்கு சகஸ்ர நாமார்ச்சனையும் நடக்கிறது.தினசரி காலை 8.30 மணி முதல் 10 மணி வரை துர்கா ஸப்தஸதீ பாராயணம், மாலை 3 மணிக்கு பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 24ம் தேதி விஜயதசமி அன்று அதிகாலை 5 மணிக்கு சுவாஸினி, தம்பதி பூøஐயுடன் நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், ஸ்ரீ மஹிஷாசூரமர்தினி புறப்பாடு மற்றும் விசேஷ அன்னதானம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சுப்புராமன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.