முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2023 03:10
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் பல நூறாண்டு பழமையானது. இங்கு ஏற்கனவே 1975 மற்றும் 1995 ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. புதிதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரமும் அதற்கு முன்பாக 16 தூண் கல் மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு கோபுரமும் கல்மண்டபத்துடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அஷ்டலிங்கம் சன்னதிக்காக கல் மண்டபம் அமைக்கப்பட்டு அஷ்டலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற நவ. 16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இன்று கோயில் முன்பாக யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இதில் கிராமத்தார்கள், தேவஸ்தான அதிகாரிகள், சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர்.