பதிவு செய்த நாள்
11
அக்
2023
04:10
பழந; பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில். அக்.,15 முதல் அக்.,23 நவராத்திரி விழா நடைபெற உள்ளதால் மலைக்கோயில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் அக்.,15 நவராத்திரி விழா துவங்கி அக்.,23 வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவின் 9 நாட்களும் மாலை 6:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். விழாவில், பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோவிலில் நடைபெறும். அக்., 23ல் மலைக்கோயிலில் பகல் 1:30 மணிக்கு . சாயரட்சை பூஜை நடைபெறும். பகல் 2:45 மணிக்கு பராசத்தி வேல் புறப்பட்டு மலைக்கோயில் சன்னதி திருக்காப்பிடப்படும். கோதை மங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறும். அதன்பின் பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்த சாம பூஜை நடைபெறும். நவராத்திரி விழா நடைபெறும் அக்.,15 முதல் அக்.,23 நவராத்திரி விழா நடைபெற உள்ளதால் மலைக்கோயில் தங்கரத புறப்பாடு நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.