நத்தம்; நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமாருக்குமணி சமேத வேணுகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி மாத சர்வ ஏகாதசி பூஜைகள் நடந்தது. இதில் சுவாமிக்கும், தேவியர்களுக்கும், திருமஞ்சனம், தீபாராதனைகள் மற்றும் துளசி, மல்லிகை, சம்மங்கி, ரோஜா உள்ளிட்ட பல வகையான மாலைகளை காணிக்கையாக செலுத்தினர். சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே நத்தம் மதுகாரம்பட்டி கோகுல கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஏகாதசி பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.