உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே வின்னகுடி அம்மச்சியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் அய்யனார், கருப்பசாமி, கன்னிமார், குதிரை வீரன் சிலைகளுடன் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்து விழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.