பதிவு செய்த நாள்
12
அக்
2023
12:10
சுசீந்திரம்: திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டார். வழிநெடுக மக்கள் மலர் துாவி வழிபாடு செய்தனர். நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று காலை 9 மணிக்கு எழுந்தருளினார். அம்மனுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனர். கேரள போலீஸ் வாத்திய
இசை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கிருஷ்ணா அகடாமி சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகள் தொடர சுவாமி ஊர்வலம் புறப்பட்டது. வழிநெடுக சுவாமியை மலர்கள் துாவி மக்கள் வரவேற்றனர்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். சுவாமிக்கு திருக்கன்சாத்து வைபவம் நடந்தது. ஊர்வலம் தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த அம்மன் வாகனம், ஆசிரமம், நாகர் கோவில், பார்வதிபுரம் வழியாக பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை சென்றடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்திருந்தனர். இதில் நாகர் கோவில்மேயர் மகேஷ் , மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் ஞானசேகர், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், டி.ஆர்.ஓ., சேதுராமலிங்கம், ஏடிஎஸ்பி சுப்பையா, மதியழகன் திருவனந்தபுரம் ஏடிஎஸ்பி அணில்குமார், கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார், சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை, வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமி, சுசீந்திரம் நவராத்திரி குழு தலைவர் வீரபத்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.