Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மழை வர வேண்டி தவளைக்கு திருமணம்: ... சதுரகிரி நவராத்திரி விழா; இரவு  பூஜையில் பங்கேற்க அனுமதிக்க கோரி போராட்டம் சதுரகிரி நவராத்திரி விழா; இரவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு
எழுத்தின் அளவு:
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2023
12:10

சுசீந்திரம்: திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டார். வழிநெடுக மக்கள் மலர் துாவி வழிபாடு செய்தனர். நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று காலை 9 மணிக்கு எழுந்தருளினார். அம்மனுக்கு தமிழக மற்றும் கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செய்தனர். கேரள போலீஸ் வாத்திய
இசை எழுப்பி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து கிருஷ்ணா அகடாமி சார்பில் பல்சுவை நிகழ்ச்சிகள் தொடர சுவாமி ஊர்வலம் புறப்பட்டது. வழிநெடுக சுவாமியை மலர்கள் துாவி மக்கள்  வரவேற்றனர்.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். சுவாமிக்கு திருக்கன்சாத்து வைபவம் நடந்தது. ஊர்வலம் தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த அம்மன் வாகனம், ஆசிரமம், நாகர் கோவில், பார்வதிபுரம் வழியாக பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை சென்றடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்திருந்தனர். இதில் நாகர் கோவில்மேயர் மகேஷ் , மாவட்ட திருக்கோவில்கள்  இணை ஆணையர் ஞானசேகர், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், டி.ஆர்.ஓ., சேதுராமலிங்கம், ஏடிஎஸ்பி சுப்பையா, மதியழகன் திருவனந்தபுரம் ஏடிஎஸ்பி அணில்குமார், கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார், சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் அனுசுயா, துணைத்தலைவர் சுப்பிரமணியபிள்ளை, வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமி, சுசீந்திரம் நவராத்திரி குழு தலைவர் வீரபத்ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar