பத்மநாபபுரம் அரண்மனையில் மன்னர் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2023 01:10
நாகர்கோவில்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றார். முன்னுதித்த நங்கை அம்மன். சுவாமிக்கு திருக்கன்சாத்து வைபவம் நடந்தது. ஊர்வலம் தொடர்ந்து 4 ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்த அம்மன் வாகனம், ஆசிரமம், நாகர் கோவில், பார்வதிபுரம் வழியாக பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை சென்றடைந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்திருந்தனர். விழாவில் முன்னதாக பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் பாரம்பரிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.