மதுரை மீனாட்சி அம்மன் தோளில் வந்து அமர்ந்த பச்சை கிளி; அம்மனே வந்ததாக பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2023 02:10
மதுரை : மீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். தன்னை வேண்டும் பக்தர்களின் கோரிக்கைகளை அம்பிகைக்கு, கிளி திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்குமாம். பச்சைக்கிளி என்றாலே மதரை மீனாட்சி அம்மன் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அத்தகைய சிறப்பு மிக்க கிளி ஒன்று மீனாட்சி அம்மன் தோளில் அமர்ந்தது பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, ஜாங்கிட் நகர் பகுதியில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேசுவர செல்வவிநாயகர் கோவில் . இங்குள்ள மூலவர் மீனாட்சி அம்மன் தோளில் நேற்று பச்சை கிளி ஒன்று பறந்து வந்து நின்றது. நாள் முழுதுமே அந்தக்கிளி அம்மன் சிலை மீதே அமர்ந்து இருந்தது. இதனால் பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அந்தக்கிளியை மொபைல் போனில் படம், வீடியோ எடுத்துக்கொண்டனர். இந்தக்கிளி சுகவன முனிவராகவும், மதுரை மீனாட்சியாகவும் இருக்கலாம் என பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்து சென்றனர்.