முத்தாலம்மன் கோயிலில் எருதுகட்டு விழா; சிறுதானிய பயிர்களை படைத்து அம்மனுக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2023 04:10
கமுதி; கமுதி அருகே ஊ.கரிசல்குளம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முத்தாலம்மன் கோயில் எருதுகட்டு விழா நடைபெறும் வழக்கம். கடந்த வாரம் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு காத்தனேந்தல் கிராமத்தில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு ஆரைகுடி,கோவிலாங்குளம், கம்மாபட்டி, கோவிலாங்குளம்பட்டி வழியாக ஊ.கரிசல்குளம் கிராமத்திற்கு சிலையை ஊர்வலமாக தூக்கி சென்றனர். கம்மாபட்டியில் உள்ள மடத்தில் அம்மன் சிலை வைக்கப்பட்டு கடந்தாண்டு தங்கள் விளைநிலங்களில் அறுவடை செய்த நெல், சிறுதானியப் பயிர்களை படைத்து சிறப்பு பூஜை செய்து அம்மனை வரவேற்றனர். பின்பு அங்கிருந்து ஊ.கரிசல்குளம் கிராமத்திற்கு முத்தாலம்மன் சிலை கொண்டு செல்லப்பட்டு கண் திறப்பு செய்து சிறப்புபூஜைகள் நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா நடந்தது.ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 15க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டனர்.வெற்றி பெற்ற காளைகளுக்கு கிராமத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.