உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயிலில் புரட்டாசி மாதம் நான்காவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை8 மணிக்கு கால சந்தி பூஜையும். மதியம் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னை முத்தாரம்மன் சப்பரம் கோவில் வளாகத்தை சுற்றி ரதவீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.