சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு; மூலவர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2023 10:10
செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரை வழிபட்டனர். கிரிசங்கர் குருக்கள் பூஜைகளை செய்தார். பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். நந்திஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சாமி வீதி உலாவும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். சிறுகடம்பூர் விசாலாட்சி உடனுரை காசி விஸ்வநாதர் கோவிலில் மூலவர் மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் உபயதாரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பனமலை தாளகிரீஸ்வரர் கோவிலில் மாலை 5 மணிக்கு தாளகீரீஸ்வரர், அஷ்டதாளாம்பிகை, நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.