திருப்பதியில் ஒரே நாளில் 4.28 கோடி ரூபாய் காணிக்கை; தரிசனத்திற்கு 6மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 11:10
திருப்பதி: திருமலை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 6மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் 26ம் தேதி நிறைவு பெற்றது. பிரம்மோற்சவத்தை தொடர்ந்து, விடுமுறை தினம் மற்றும் புரட்டாசி தரிசனம் செய்ய வேண்டும் என திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், காத்திருப்பு மண்டபங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து, வெளியில் உள்ள வரிசையில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர்.இதனால் தரிசனத்திற்கு, 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று ஒரே நாளில் பக்தர்கள் 4.28 கோடி ரூபாய் காணிக்கை செலுத்தினர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்துவருகிறது.