நாளை மகாளய அமாவாசை; ராமேஸ்வரத்தில் சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 12:10
ராமேஸ்வரம்: நாளை (அக்.14) புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். இதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர் ஆன்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள் புரட்டாசி மகாளய அமாவாசையில் பூஜை செய்து புனித நீராடுவது உகந்தது. அதன்படி நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் பூஜை செய்து புனித நீராடுவர். இதைத்தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவர். பக்தர்கள் பாதுகாப்பாகபுனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம், போலீசார் இணைந்து கோயில் நான்கு ரத வீதி, அக்னி தீர்த்த கடற்கரையில் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு டவர் அமைத்து வருகின்றனர். அவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி வந்து செல்ல கூடுதல் போலீசாரை நியமிக்க எஸ்.பி., தங்கதுரை நடவடிக்கை எடுக்க வேண்டும்.