நான்குநேரி பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 01:10
நான்குநேரி; நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். இங்கு நித்திய எண்ணெய் காப்பு நடப்பது கோயிலின் தனி சிறப்பு ஆகும். இதனை தொடர்ந்து நேற்று நான்குநேரி மடத்தின் 31வது மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுடன் வானமாமலை பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. இதில் காலையில் விஸ்வ ரூப தரிசனத்தை தொடர்ந்து ஒரு கோட்டை எண்ணெய் காப்பு வைபவம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு தீர்த்த, ஜடாரி, பிரசாத வினியோகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை சுமார் 4.30 மணிக்கு வானமாமலை பெருமாள் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சொற்பொழிவு, நாதஸ்வர இசை கச்சேரி மற்றும் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடந்தது. இரவு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயார், ஆண்டாள் வாகனத்தில் எழுந்தருளிய பின்பு வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.