பதிவு செய்த நாள்
13
அக்
2023
01:10
கன்னியாகுமரி; கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் உள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோவிலில் குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயர மான ஐந்தரை அடி உயர சிவலிங்க சிலை உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. நேற்று மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், பிர இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் வகையான ஆகிய 11 வாசனை திரவியங்களால் குகநாதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். 5.30 மணிக்கு மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தார்.