குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் ஐப்பசி விசு தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2023 02:10
குற்றாலம்: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோயிலில் இன்று ஐப்பசி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
குற்றாலம், குற்றாலநாதர் -குழல்வாய்மொழி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி விசு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பிச்சுமணி பட்டர் தலைமையில் ஜெயமணிசுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர் சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து திருவிழாவிற்காக இலஞ்சியில் இருந்து திருவிலஞ்சி குமரனை அழைத்து வரும் வைபவம் நடந்தது. விழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. நேற்று 12ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இன்று 13ம்தேதி காலையில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட வடம் பிடித்தனர். 15ம் தேதி காலை 9.30 மணி, இரவு 7 மணிக்கு நடராச மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 16ம்தேதி காலை 10.30 மணிக்கு மேல் சித்திரசபையில் நடராச மூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 18ம்தேதி விசு தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து திருவிலஞ்சி குமரனுக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.