Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி ... 221 கிலோ லட்டில் 7 அடி உயர பிரம்மாண்ட பெருமாள்; பக்தர்கள் தரிசனம் 221 கிலோ லட்டில் 7 அடி உயர பிரம்மாண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வதான்யேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி; தருமபுரம் ஆதீனம் வழிபாடு
எழுத்தின் அளவு:
வதான்யேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி; தருமபுரம் ஆதீனம் வழிபாடு

பதிவு செய்த நாள்

13 அக்
2023
03:10

மயிலாடுதுறை; வதான்யேஸ்வரர் கோயிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் வழிபாடு செய்தார்.

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக பூர்த்தி விழாவில் தருமபுரம் ஆதின குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளலார் கோயில் என்றழைக்கப்படும் வதான்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  தேவார பாடல் பெற்ற இத்தலம் சிவபெருமான் ரிஷப தேவரின் கர்வத்தை அடக்கி தக்ஷிணாமூர்த்தியாக காட்சி தரும் தலம் ஆகும். குருபரிகாரத் தலமான இக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த செப்.10ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து,சிறப்பு பூஜைகள்  செய்யப்பட்டு, இன்ற மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில், சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, மகா பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு செய்யப்பட்டு சுவாமி அம்பாள் மற்றும்  மேத்தா தக்ஷிணாமூர்த்திக்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கோயில் கட்டளை மடத்தில் தருமபுரம் ஆதீனம் கொலுக்காட்சியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், வர்த்தக சங்க நிர்வாகிகள் செந்தில்வேல், விஎச்பி. மாநில துணைத் தலைவர் வாஞ்சிநாதன், ஆதீன திருமடத்தின் பொதுமேலாளர் ரங்கராஜன்,  மற்றும் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சமபந்தியில் நரிக்குறவர் குழந்தைகளுக்கு அனுமதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar