வத்தலக்குண்டு: வத்தலகுண்டு பகவதி அம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர். மூன்று நாட்கள் விழா கடந்த வாரம் சாமி சாட்டுதலுடன் துவங்கியது மஞ்சள் ஆற்றிலிருந்து கரகம் எடுத்துவரப்பட்டது. முதல் நாள் பால்குடம் தீச்சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இறுதி நாளில் பகவதி அம்மன் சிவன் முருகன் கருப்பண்ணசாமி வேடம் அணிந்து பக்தர்கள் நகர்வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து பெண்கள் கும்மி, குலவையுடன் மழை வளம் வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்து வந்து ஆற்றில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.