பதிவு செய்த நாள்
13
அக்
2023
05:10
பழநி; பழநி கோயிலில் பக்தர்களின் மருத்துவ அவசரத் தேவையை பூர்த்தி செய்ய நவீன ஆம்புலன்ஸ் வசதி செய்து தர பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பழநி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை பாதை, கூட்ட நெரிசலில் செல்லும் போது பக்தர்கள் சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய முதலுதவி அளிக்க மலைக்கோயில், அடிவாரம் வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை இடும்பன் கோயில், அருகே மருத்துவமனைகள் உள்ளன. பொதுவாக படிப்பாதை, யானைப்பாதை மூலம் வேகமாக வரும் பக்தர்கள் மலைக்கோயில் வந்தவுடன் மூச்சுத் திணறால் ஏற்படுகிறது. இதில் உடல் நலம் சரியாக உள்ள நபர்கள் பாதிப்பு குறைவாக ஏற்படுகிறது. சக்கரைநோய், ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் உள்ள நபர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் வயதான நபர்கள் படிப்பாதை, யானை பாதையில் வரும் போது சிரமம் அடைகின்றனர்.
கோயிலில் நெரிசல் அதிகம் உள்ள காலங்களில் கட்டண மற்றும் பொது தரிசன வழிகளில் மலை கோயிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மலைக்கோயிலில் உள்ள மருத்துவமனை மூலம் முதலுதவி பெறப்படுகிறது. மலைக்கோயிலில் மருத்துவர்கள் மூலம் முதலுதவி பெறும் பக்தர்கள் அடுத்த கட்ட சிகிச்சைக்காக மருத்துவமனை செல்ல உடனடியாக அடிவாரம் பகுதிக்கு வர வின்ச் அல்லது ரோப்கார் சேவையை பயன்படுத்துகின்றனர். அதன்பின் கோயில் உடல் நலக் கோளாறால் பாதிக்கப்படும் பக்தர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க, அருகில் உள்ள பழநி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் அவசர வாகனம் உள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் போதுமான வசதிகள் கொண்ட கருவிகள் இல்லை. இதனால் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்படும் பக்தர்களை, வரும் வழியில் உயிரிழப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் தற்போது அடிக்கடி ஏற்படுகிறது. இதில் இதய நோய் பாதிப்புகள் உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே மேம்படுத்தப்பட்ட மருத்துவ கருவிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் புதிய அனைத்து வசதிகளும் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் கோயில் நிர்வாகம் சார்பில் வாங்க திட்டமிடப்பட்டது. ஆனால் புதிய ஆம்புலன்ஸ் வாகனம் செயல்பாட்டிற்கு வரவில்லை. மேலும் முறையான பயிற்சி பெற்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் கோயில் நிர்வாகம் நியமிக்க வேண்டும். பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களின் உயிரை மருத்துவ அவசர காலங்களில் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு கோயில் நிர்வாகத்திற்கு உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை விரைவில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, பக்தர், நரிக்கல்பட்டி; பழநி, கோயிலுக்கு நாள்தோறும் வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு பக்தர்கள் வருகை புரிகின்றனர். நெடுந்தொலைவு வாகன பயணத்தில் வந்த பிறகு படிப்பாதையில் மலையேறி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் இருந்த வந்த பக்தர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உடல்நல குறைவால் பாதிக்கப்படுவது அவர்களுடன் வந்த குடும்பத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் இதை செய்து செய்ய கோயில் நிர்வாகம் மலைக்கோயில் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களில் தகுந்த வசதி செய்து தர வேண்டும்." என்றார்.