பதிவு செய்த நாள்
14
அக்
2023
07:10
மேட்டுப்பாளையம்: புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி சனிக்கிழமை விழா வெகு விமர்சையாக நடைபெறும். இன்று புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை, 3:30 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4:00 மணிக்கு, பக்தர்கள் வழிபாட்டுக்கு கோவில் திறக்கப்பட்டது. பின்பு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, உற்சவமூர்த்தி அரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், எழுந்தருளினார். அங்கு தீபாராதனை காண்பித்து, தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டனர்.