திருச்செந்தூர் கடலில் நீராடி முருகன், முன்னோரை வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2023 10:10
திருச்செந்தூர்; முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி முருகனை வழிபாடு செய்தனர்.
ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என்று சிறப்பு பெற்றது. மகாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை முதல் புரட்டாசி அமாவாசை வரை நீடிக்கிறது. இந்நாளில் நாம் கொடுக்கும் தர்ப்பணம், பெயர் தெரிந்த மற்றும் தெரியாத நம்முடைய முன்னோர்கள் அனைவரையும் சென்று சேரும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளும், தான தர்மங்களும் அவர்கள் மோட்சத்தை அடைய செய்யும். இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.