ஜெய் ஸ்ரீ ராம்.. அனுமன் கூறிய அற்புத மந்திரம்; இது வெறும் வார்த்தையல்ல..
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2023 03:10
ஸ்ரீ ராம ஜெயம் என்ற மந்திரம் வெற்றியை மட்டுமல்ல உச்சரிப்பவருக்கு மன நிம்மதியையும் கொடுக்கும் அற்புத மந்திரம் ஆகும். அனுமன் கூரிய ஸ்ரீ ராம ஜெயம், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வார்த்தையே மந்திரமானது. ராம பக்தன் அனுமன் ஜெய் ஸ்ரீ ராம் என்ற இந்த மந்திரத்தை 33 கோடி முறை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உச்சரித்ததால் இன்றும் சிரஞ்சீவியாக போற்றப்படுகிறார். ராமா என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவின் பிள்ளை அனுமன். அவன் கடலைத் (நீர்) தாண்டியும், வான் (ஆகாயம்) வழியாக பறந்தும் இலங்கை சென்றான். பூமிதேவியின்(நிலம்) மகளான சீதையை அங்கே கண்டான் இவ்வாறு அனைதிற்கும் காரணமாக இருந்தது அவர் கூறிய ராம மந்திமே.
ராமபிரான் 11ஆயிரம் ஆண்டுகள் மண்ணுலகில் வாழ்ந்து வைகுண்டம் திரும்ப ஆயத்தமானார். அயோத்தியில் ஓடும் சரயுநதியில் இறங்கி அனைத்து மக்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு புறப்பட்டார். அப்போது ராமனோடு செல்ல விரும்பாமல் தனித்து நின்றவர் அனுமன் மட்டுமே. ராமர் அனுமனிடம், மாருதியே! நீ வைகுண்டம் கிளம்பவில்லையா? என்று அழைத்தார். வைகுண்டத்தில் அமிர்தம், ஆனந்தம், சுகம் எல்லாம் இருந்தாலும் ராமநாமம் இல்லையே. ராமானந்தம் இல்லாத வைகுண்டத்தை விட பூலோகமே எனக்கு பிடித்திருக்கிறது. இங்கு ராமநாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன், என்று பதிலளித்தார். இத்தகைய சிறப்பு மிக்க இந்த ராம நாமத்தை கூறினால் எதிலும் வெற்றிதான். ஜெய் ஸ்ரீ ராம்..!