பாலக்காடு: கல்பாத்தி தேர் திருவிழா அறிவிப்பு சிற்றேடு வெளியிடப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற கல்பாத்தி விசாலாக்ஷி சமேத விஸ்வநாத கோவில். இக்கோவிலிலிலும் மந்தக்கரை மகா கணபதி, பழைய கல்பாத்தி லட்சுமி நாராயண பெருமாள், சாத்தபுரம் பிரசன்ன மகா கணபதி ஆகிய உப கோவில்களிலும் எல்லா ஆண்டும் ஐப்பசி மாதம் தேர் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு தேர் திருவிழா நவ. 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 17ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி உள்ள திரு தேரோட்டம் நவ., 14, 15, 16 தேதிகளில் நடக்கின்றன. முன்னதாக திருவிழாவின் அறிவிப்பு சிற்றேடு வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விசாலாக்ஷி சமேத விஸ்வநாத கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கோவில் புரோகிதர் பிரஹமஸ்ரீ பிரபுதேவசேனாபதி, கோவில் பிரதிநிதிகளான சுஜித் குமார் வர்மா, கிருஷ்ண, மகேஷ் கிருஷ்ண, முரளி ராமநாதன் ஆகியோரும் பக்தர்களும் சேர்ந்து ஒருங்கிணைந்து தேர் திருவிழா மற்றும் கோவில்களை குறித்தான தகவல்கள் அடங்கிய சிற்றேடு வெளியிட்டன.