ஏர்வாடி தர்கா கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2012 10:10
கீழக்கரை: ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா கந்தூரி விழா, நேற்று மாலை தக்பீர் முழக்கத்துடன் கொடியிறக்கம் நடந்தது. ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா, செப்.,17ல் துவங்கியது. நிறைவு நிகழ்ச்சியாக உலக மக்களின் நல்லிணக்கம் வேண்டி, மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன் சிறப்பு "துஆ செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்களின் தக்பீர் முழக்கத்துடன் நேற்று மாலை கொடியிறக்கம் நடந்தது. ஏற்பாடுகளை தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் ஹூசைன் தலைமையில், செயலாளர் செய்யது பாருக் ஆலிம் அரூஸி,துணை தலைவர் செய்யது சிராஜூதீன்,முன்னாள் தர்கா கமிட்டி செயலாளர் துல்கருணை பாட்சா மற்றும் நிர்வாக சபையினர் செய்தனர்.