Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரியில் பரிவேட்டை; ... பரளி ஆற்றில் ஆதிகேசவ பெருமாளுக்கு ஆராட்டு பரளி ஆற்றில் ஆதிகேசவ பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகிஷனை வதம் செய்து மகிஷாசுரவர்தினியாக குலசை முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
மகிஷனை வதம் செய்து மகிஷாசுரவர்தினியாக குலசை முத்தாரம்மன்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

25 அக்
2023
12:10

உடன்குடி; குலசேகரன்பட்டணம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அன்னை முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன்
கோவில் தசரா திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது. 10ம் திருநாளான நேற்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தொடர்ந்து சூரன் முன்னே செல்ல அன்னை முத்தாரம்மன் சிம்மவாகனத்தில் சென்று கட ற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே எழுந்தருளி லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் மகிஷாசூரசம்காரம் செய்தல் நடந்தது. 11ம் திருநாளான இன்று (25ம் தேதி) சூரசம்காரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனை, 2 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருளி சாந்தாபிஷேக ஆராதனை நடக்கிறது. 3 மணிக்கு அம்மன் திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வருதல், அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, ஆராதனை, 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் திருதிருவீதி உலா புறப்பாடு நடக்கிறது. மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் காப்பு களையப்படும். 3,500 போலீசார் பாதுகாப்பு குலசேகரன்பட்டணம் தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை சரகடி.ஐ.ஜி., பிரவேஷ்குமார் தலைமையில் துாத்துக்குடி எஸ்.பி., பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 5 ஏ.டி.எஸ்.பி., க்கள், 20 டி.எஸ்.பி., க்கள், 68 இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., க்கள் மற்றும் போலீசார் என 3,500 பேர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 
temple news
நேபாளம்; நேபாளத்தில் உள்ள சீதா கோயிலுக்கு இந்தியா 111 மீட்டர் அளவிலான சுனாரி வழங்கியது. பிபா பஞ்சமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar