பதிவு செய்த நாள்
17
அக்
2012
10:10
புதுச்சேரி: கதிர்வேல் சுவாமி கோவிலில், விஷ்ணு துர்கா பரமேஸ்வரிக்கு நவதுர்கா மகா யாகம் நேற்று நடந்தது.கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதை முன்னிட்டு, விஷ்ணு துர்கா பரமேஸ்வரிக்கு, தீப துர்கா யாகம் நடந்தது.இரண்டாம் நாளான நேற்று காலை, மூல துர்கா யாகம் நடந்தது. இன்று முதல், வரும் 24ம் தேதி வரை காலை 10 மணிக்கு, சாந்தி துர்கா யாகம், வன துர்கா யாகம், ஆலிணி துர்கா யாகம், ஜாதவேதோ துர்கா யாகம், ஜ்வல துர்கா யாகம், லவன துர்கா யாகம், திருஷ்டி துர்கா யாகம் ஆகியவை நடக்கின்றன.யாகம் நடக்கும் நாட்களில் தினமும் சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை, நவ கலசாபிஷேகம், சண்டி நவாவரன பூஜை, நடத்தப்பட்டு பிரசாத வினியோகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நாட்டாண்மை பாஸ்கரன், அறங்காவலர் குழு தலைவர் முத்தையன் மற்றும் நிர்வாகிகள், ஆலய அர்ச்சகர் பாலசுப்ரமணிய சிவாச்சாரியார் செய்துள்ளனர்.