பதிவு செய்த நாள்
17
அக்
2012
10:10
புதுச்சேரி: சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி விழா துவங்கியது. எல்லப்பிள்ளைச்சாவடியில் உள்ள சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவில் உள்ளது. இங்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, மாத்ருகா பூஜை, ஆவஹத்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மகா கணபதி ஹோமம் நடந்தது.இன்று (17ம் தேதி) முதல் வரும் 21ம் தேதி வரை முறையே, காலை 8 மணி மற்றும் 10 மணிக்கு நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம், சுப்ரமணிய ஷடாசரி ஹோமம், தன்வந்திரி ஹோமம், மகா சுதர்சன ஹோமம், சூக்த ஹோமம், அஷ்ட லட்சுமி ஹோமம், ஹயக்ரீவர் ஹோமம், ஆஞ்ஜநேயர் ஹோமம், மகா ருத்ர ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம் ஆகியவை நடக்கின்றன. வரும் 22ம் தேதி அதிஷ்டானத்தில் ஆராதனை, 23ம் தேதி காலை 7.30 மணிக்கு மகா சண்டிஹோமம், 24ம் தேதி காலை 9 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், அம்மன் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன.