Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யனார் கோயிலில் ஐப்பசி ... திருப்பரங்குன்றம் கோயில்களில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் திருப்பரங்குன்றம் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்; 900 கிலோ காய், கனியில் அலங்காரம்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு 1000கிலோ அரிசியில் அன்னாபிஷேகம்; 900 கிலோ காய், கனியில் அலங்காரம்

பதிவு செய்த நாள்

28 அக்
2023
04:10

தஞ்சாவூர், ஐப்பசி பெளர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 900 கிலோ காய்,கனி வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், லிங்கம், 12 அடி உயரமும், ஆவுடையார், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத் திருமேனியாகத் மூலவரான பெருவுடையார் திகழ்கிறார். பெருவுடையாருக்கு ஐப்பசி பெளர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு பக்தர்களால், 1,000 கிலோ பச்சரிசி, 900 கிலோ காய்,கனி வழங்கப்பட்டன. பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து, லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.  இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம், ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்து இருந்தனர். மேலும், இரவு சந்திரகிரஹனம் என்பதால், இரவு 7:00 மணி வரை தரிசனம் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு, பின்னர் இரவு 8:00 மணிக்கு  நடை சாத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று நடந்த நிறைப்புத்தரிசி பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கேரள பூஜை ... மேலும்
 
temple news
கோவை; இடையர்பாளையம் வி. ஆர். ஜி. கல்யாண மண்டபத்தில் நாம சங்கீர்த்தன வைபவம் மற்றும் ஸ்ரீ மகா ருத்ரம், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு ... மேலும்
 
temple news
தளவாய்புரம்; புனல்வேலி திரவுபதி அம்மன் கோயில் ஆடி பூக்குழி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar