செஞ்சி: வடவெட்டி அங்காளம் மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.செஞ்சி தாலுகா வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங் காரம் செய்தனர். பகல்1 மணிக்கு மகா தீபாராதனை செய்து சிறப்பு பூஜைகள் நடந்தன.இரவு 7 மணிக்கு பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 8 மணிக்கு இன்னிசை கச்சேரியும், தொடர்ந்து சிறப்பு பட்டி மன்றமும் நடந்தது. இரவு 12 மணிக்கு நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.