Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பெரியமாரியம்மன் கோவில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கேதாரகவுரி விரத வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2012
11:10

திருச்செங்கோடு: கேதாரகவுரி விரதத்தை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர். திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் உள்ளது. ஆண் பாதி, பெண்பாதி என்கிற தத்துவம், சிவனின் திருவிளையாடல்களில் ஒன்றாக கருதப்படும். சிவனில் பாதியாக இடம் பெற வேண்டி, சக்தி தேவி, கேதார கவுரி விரதம் இருந்தாகவும், விரதம் முடிந்து மகாளய அமாவாசை அன்று, தன்னில் சரிபாதியை தந்த பரமன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்ததாகவும், வரலாறு கூறுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த கேதார கவுரி விரதத்தை, பக்தர்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். மேலும், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் கேதார கவுரி விரதம் இருந்தால், திருமணத்தடை நீங்கும் என்பது ஐதீகம்.கேதார கவுரி விரதம் இருந்த பக்தர்கள் மகாளய அமாவாசையான நேற்று, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் மலைக்கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலவர், ஆதிகேசவ பெருமாள் ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar