பதிவு செய்த நாள்
17
அக்
2012
11:10
ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், கொலுவைத்து, பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நேற்று முன்தினம் கொலு வைக்கப்பட்டது. கருமாரியம்மன் அலங்காரத்தில், பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொலுவையொட்டி நடந்த சிறப்பு பூஜையில், மாநகரின் பல பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.இரண்டாம் நாளான நேற்று, துர்க்கையம்மன் அலங்காரத்தில், பெரியமாரியம்மன் அருள்பாலித்தார். இன்று, காசிவிசாலாட்சி அம்மன் அலங்காரத்திலும், நாளை இந்திராணி அலங்காரத்திலும், பெரியமாரியம்மன் அருள்பாலிக்கிறார். அக்., 19ம் தேதி, சங்கரி, 20ம் தேதி சமயபுரம் மாரியம்மன், 21ம் தேதி காமாட்சியம்மன், 22ம் தேதி ராஜராஜேஸ்வரி, 23ம் தேதி சரஸ்வதி அலங்காரத்தில், பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.உதவி ஆணையர் வில்வமூர்த்தி, செயல்அலுவலர் சுப்ரமணியன் ஏற்பாடுகளை செய்கின்றனர்.