பதிவு செய்த நாள்
17
அக்
2012
11:10
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கல்சுரல் அகடமி மற்றும் தென் மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்கம் சார்பில் சக்தி தரிசனம் விழா 21 சப்பரங்களின் ஒரு சேர அணிவகுப்பு நெல்லை டவுனில் வரும் 24ம் தேதி நடக்கிறது. நெல்லை டவுனில் கல்சுரல் அகடமி சார்பில் ஆண்டுதோறும் தசரா திருவிழாவை முன்னிட்டு 21 அம்மன் கோயில் சப்பரங்களில் அணிவகுப்பு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை டவுன் அம்மன் கோயில்களில் நவராத்திரி பூஜைகள் துவங்கியுள்ளது.தசரா திருவிழாவான 24ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு நெல்லை டவுனில் உள்ள அம்மன் கோயில்களின் 21 சப்பரங்கள் டவுன் பெரிய தேர் திடலில் அணிவகுத்து நிற்கும்.நெல்லை டவுன் பகவத்சிங் தெரு ஸ்ரீதுர்க்கை அம்மன், தடிவீரன் கோயில் கீழத்தெரு ஸ்ரீதேவி மாரியம்மன், திருப்பணிமுக்கு ஸ்ரீமாரியம்மன், தடிவீரன்கோயில் மேலத்தெரு ஸ்ரீதேவி சுந்தராட்சிஅம்மன், சிவா தெரு ஸ்ரீமுத்தாரம்மன், மாதா கோயில் தெரு ஸ்ரீஉச்சினிமாகாளிஅம்மன், காவல்பிறை தெரு ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன், குற்றாலம் ரோடு ஸ்ரீ முப்பிடாதிஅம்மன், தெப்பக்குளம் கீழ்த்தெரு ஸ்ரீவலம்புரி அம்மன், கீழ ரதவீதி ஸ்ரீ வாகையடி அம்மன், புகழேந்தி தெரு ஸ்ரீவாகையடி அம்மன், அக்கசாலை விநாயகர் கோயில் தெரு ஸ்ரீஉச்சினிமாகாளி அம்மன், மகிழ்வண்ணபுரம் தெரு ஸ்ரீதங்கம்மன், மேட்டுத்தெரு ஸ்ரீஅறம் வளர்த்த நாயகிஅம்மன், சாலியர் தெரு ஸ்ரீமாரியம்மன், புட்டாபுரத்தி அம்மன் கோயில் தெரு ஸ்ரீபுட்டாபுரத்தி அம்மன், வெள்ளம் தாங்கி பிள்ளையார் கோயில் தெரு ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்மன், அரசரடி பாலத்தெரு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், சந்திவிநாயகர் கோயில் ஸ்ரீதுர்க்கை அம்மன், தண்டியல் சாவடி தெரு ஸ்ரீஉச்சினிமாகாளிஅம்மன், பழனிதெரு ஸ்ரீமுப்பிடாதிஅம்மன் ஆகிய 21 கோயில் சப்பரங்களும் அணிவகுப்பில் பங்கேற்கும்.