Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி புதன்; வேணுகோபால சுவாமி ... புதுப்பொலிவு பெறும் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் புதுப்பொலிவு பெறும் கதலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்; திருப்பணியை துவக்கி வைத்தார் தருமபுரம் ஆதீனம்
எழுத்தின் அளவு:
வீரட்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்; திருப்பணியை துவக்கி வைத்தார் தருமபுரம் ஆதீனம்

பதிவு செய்த நாள்

01 நவ
2023
01:11

மயிலாடுதுறை: பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் பாலாலயம்; தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, திருப்பறியலூர் என்று அழைக்கப்படும் பரசலூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் செய்நன்றி மறந்த மாமன் முறை கொண்ட தட்சனை, வீரபத்திரரை கொண்டு தலையை கொய்து, சுவாமி வதம் செய்த தலமாகவும், பின்னர் தட்சனின் மனைவி வேதவல்லி வேண்டுதலை ஏற்று ஆட்டின் தலையை பொருத்தி, தட்சனை சிவபெருமான் உயிர்ப்பித்த தலமாகவும் விளங்குவதால் சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டது.

கோவிலின் வரலாறு குறித்து தக்க யாக பரணி என்ற நூலில் ஒட்டக்கூத்தர் விவரமாக குறிப்பிட்டுள்ளார். கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு விவாகத்தடை மற்றும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்றது. இதனை அடுத்து இன்று சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு பாலாலயம் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து உளி கொண்டு, சுவற்றைப் பெயர்த்து தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருப்பணிக்கான சிறப்பு பூஜைகளை செய்து முகூர்த்த கால் நட்டு, மகா தீபாராதனை காட்டினார். சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தர குருக்கள் தலைமையில் திருக்கடையூர் கணேஷ் குருக்கள் மற்றும் மகேஷ் குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான்கள், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, திருக்கடையூர் கோவில் உள்துறை விருதகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar