தேவகோட்டை: ஐப்பசி முதல் தேதியை முன்னிட்டு தேவகோட்டை,கோட்டூர் கிராமத்தில் உள்ள விநாயகர், சிவன்,பெருமாள் கோயில்களிலிருந்து சுவாமிகள் தேவகோட்டை எல்லையில் உள்ள மணிமுத்தாறில் தீர்த்தவாரி கொடுத்தனர். ஆற்றங்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு தீபராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.