காஞ்சிபுரம்: மழை வேண்டி, காஞ்சிபுரம் பாலாற்றில் சிவ பூஜை நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்த ஆண்டு போதிய மழை இல்லை. ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. விவசாயம் பாதிக்கப் பட்டு உள்ளது. எனவே, மழை வேண்டி திருவண்ணாமலை கிரிவலக் குழு சார்பில், காஞ்சிபுரம் பாலாற்றில் நேற்று சிவபூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு, சிவ தீட்ஷை பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பாலாற்றில் திரண்டனர். அனைவரும் ஆற்றங்கரையில் அமர்ந்து, மணலில் லிங்கம் அமைத்து, சிவனை வழிபட்டனர். பின்னர் மழை வேண்டி பதிகங்கள் பாடினர். தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடினர்.