Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூடலுாரில் கந்த சஷ்டி விழா காப்பு ... திருக்கோவிலூர் கோவில்களில் கேதார கவுரி நோன்பு; பக்தர்கள் வழிபாடு திருக்கோவிலூர் கோவில்களில் கேதார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது

பதிவு செய்த நாள்

13 நவ
2023
05:11

பழநி: பழநி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதல் உடன் துவங்கியது.

பழநி முருகன் கோயிலில் இன்று (நவ.13 ல்) கந்த சஷ்டி திருவிழா துவங்கியது. காலையில் கோயில் யானை கஸ்தூரி மலைக்கோயில் வந்தது. மதியம் 12:00 மணிக்கு மலைக்கோயிலில் உச்சி காலபூஜை நடை பெற்றது.அதில் விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி, தேய்வானை, துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்கள் ஆகியவற்றிற்கு காப்பு கட்டினர். திருஆவினன்குடி கோயிலில் மூலவர், உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. விரதம் இருக்கும் பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் துவங்கினர். மாலையில் சண்முகர் தீபாராதனை நடைபெறும். விழா நாட்களில் தினமும் சுவாமி புறப்பாடு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது. கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.18,ல் மாலை கிரிவீதியில் நடைபெறும். அன்று மலைக்கோயிலில் மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்று, மதியம் 2:45 மணிக்கு மேல் சின்னகுமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின் மலைக்கோவிலில் சன்னதி அடைக்கப்படும். சின்னகுமாரசுவாமி அடிவாரம் மண்டபத்தில் எழுந்தருள்வார். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேவசேனை, முத்துக்குமார சுவாமி, மயில்வாகனத்தில் அடிவாரம், மண்டபத்தில் எழுந்தருள்வார். அன்று மாலை 6:00 மணிக்கு மேல் நான்கு கிரிவீதிகளில் சூரன் வதம் நடைபெறும். அதன் பின் ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடைபெறும். அன்று இரவு 9:00 மணிக்கு மேல் சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்த ஜாம பூஜை நடைபெறும். அன்று மலைக்கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. ஏழாம் நாளான நவ‌.19,ல் மலைக் கோயிலில் காலை 9.30 மணிக்கு மேல் வள்ளி, தேவசேனா, சண்முகருக்கு திருக்கல்யாணம், மாலை 6:30 மணிக்கு மேல் பெரிய நாயகி அம்மன் கோவிலில் வள்ளி,தேவசேனா, முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar