திருத்தணி: மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.திருத்தணி முருகன் கோவிலின், உபகோவிலான மத்தூர் மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.கோவில் இணை ஆணையர் புகழேந்தி விழாவை துவங்கி வைத்தார். கோவில் வளாகத்தில், கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு உள்ளன. தினமும், மாலை, கொலுவுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து பக்தர்களுக்கு, சர்க்கரை பொங்கல், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக, மூலவர் மகிஷாசூரமர்த்தினி அம்மனுக்கு காலையில், சிறப்பு அபிஷேகமும் மற்றும் தீபாராதனை நடக்கிறது.