மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி அமாவாசை தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2023 06:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி (துலா) மாத அமாவாசை தீர்த்தவாரி நடைபெற்றது. சிவாலயங்களில் இருந்து காவிரியின் இரண்டு கரைகளிலும் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொட்டும் மழையில் நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்று புனித நீராடினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரிதுலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. மயில் உருவில் சிவனை பூஜித்து சாபவிமோசனம் அடைந்த மாயூரநாதர் ஆலயம் மற்றும் வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்ச்சவம் நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்தாக வரலாறு கூறுகிறது. இதனை முன்னிட்டு இன்’று அமாவாசை தீர்த்தவாரி மயிலாடுதுறையில் பாடல்பெற்ற சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பட்டு காவிரியில் தீர்த்தவாரி வழங்குவது வழக்கம். இன்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அயபாம்பிகை சமேத மாயூநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி, தெப்பக்குள காசிவிஸ்வநாதர், ஐப்பசிமாத அமாவாசையொட்டி வதானேஸ்வரர் கோயிலில் இருந்து கங்கை அம்மன் சமேத மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினார்.. பின்னர் அஸ்திரதேவருக்கு இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், ஆதீனங்களின் கடட்டளை தம்பிரான்’கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மேதாதட்சிணாமூர்த்தி சுவாமி ஆண்டுக்கு ஒருமுறை ஐப்பசி (துலா) மாதஅமாவாசை அன்று ஒருநாள் மட்டும் வீதியுலாவாக காவிரிக்கு எழுந்தருளி தீர்த்தம்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.