திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 11:00 மணிக்கும், மாலை 6:00 மணிக்கும் சண்முகார்ச்சனை நடக்கிறது. சஷ்டி திருவிழாவில் நவ.13 முதல் நவ. 18 வரை ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு பதினாறு வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமாகி, சண்முகரின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சார்யார்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆறுமுகங்களுக்கும் சமகாலத்தில் தீபாராதனைகள் நடக்கிறது. பின்பு சர்க்கரை பொங்கல், புளிசாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், வடை படைக்கப்படுகிறது.