மேலுார்; மேலுார், கொட்டகுடி கற்குடைய அய்யனார் கோயிலில் ஐப்பசி மாத புரவி எடுப்பு திருவிழா துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாளான இன்று குதிரை பொட்டலில் இருந்து மந்தைக்கு புரவிகள் கொண்டு வரப்பட்டது. இரண்டாம் நாளான நாளை (நவ.15) மந்தையில் இருந்து 2 கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். மழை பெய்து எல்லா வளமும் கிடைக்கவும், நோய் நொடியில்லாமல் வாழவும் புரவி எடுப்பு திருவிழா கொண்டாடப்படுவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.