Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காவிரி அன்னைக்கு மகாஆரத்தி; நதியில் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி குங்கும, வில்வார்ச்சனை துவக்கம் காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

14 நவ
2023
05:11

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்காப்பு அலங்காரம் செய்திருந்தனர். இரவு 10.30மணிக்கு கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனை வடக்கு வாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு கோவில் பூசாரிகள் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடி ஊஞ்சல் தாலாட்டு நடத்தினர். ஊஞ்சல் உற்சவம் துவங்குவதற்கு முன்பிருந்தே லேசான தூரல் இருந்தது. உற்சவம் நடந்த போது மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நனைந்தபடி அம்மன் பாடல்களை பாடியபடி சாமி தரிசனம் செய்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்.பி., கோவிந்தராஜ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்: இந்த மாதம் அமாவாசை 12ம் தேதி மதியம் 3 மணிக்கு துவங்கி 13ம் தேதி மதியம் 3 மணியளவில் முடிவடைந்தது. இதனால் பக்தர்கள் இரண்டு நாட்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் தீபாவளி முடிந்து சென்னை திரும்பியவர்களுக்காக முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்களை இயக்கினர். இதனால் மேல்மலையனூருக்கு அமாவாசையன்று மிக குறைந்த அளவில் சிறப்பு பஸ்களை இயக்கினர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும் மழை கொட்டியது. பக்தர்கள் ஒதுங்கவும் இடமின்றி மழையில் நனைந்தனர். அப்போது சொந்த ஊர் திரும்ப பஸ்கள் இல்லை. இதனால் ஆத்திரமான பக்தர்கள் செஞ்சி செல்லும் சாலையில் வேன், கார்களை மறித்து சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்து வந்த வளத்தி போலீசார் பக்தர்களை சமாதானம் செய்து போக்கு வரத்தை சரி செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar