காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி குங்கும, வில்வார்ச்சனை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 05:11
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தொடங்கப்பட்டது. சாஸ்திரப்படி நூறு ருத்விக்களுடன் அர்ச்சனைகள் நடத்தப்பட்டன. இது குறித்து கோயில் வேத பண்டிதர் அர்த்தகிரி சாமி கூறியதாவது; உலக நன்மைக்காக சுவாமிக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்மனுக்கு கோடி குங்குமார்ச்சனையும் செய்யப்படுகிறது.
பவித்ரமான ( தெலுங்கு ) கார்த்திகை மாதத்தில் பரமேஸ்வரரை வில்வத்துடன் வழிபட்டால் கோடி பிறவிகளின் பலன்கள் கிடைத்து முக்தி கிடைக்கும் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. உலக நன்மைக்காக வாயு லிங்கேஸ்வரரின் கோடி வில்வங்களைக் கொண்ட அர்ச்சனை பூஜைகள் சாஸ்திரப்படி தொடங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர் மற்றும் வேத பண்டிதர்கள் அர்த்தகிரி, மாருதி சர்மா மற்றும் ரித்விக்கள், அர்ச்சனைக்கு தீட்சை எடுத்தனர். முதலில் கலச ஸ்தாபன பூஜையும், பின்னர் வேத பண்டிதர்கள் சுவாமிக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்மனுக்கு கோடி குங்கும அர்ச்சனையும் செய்தனர். தினமும் இரண்டு காலங்களில் அர்ச்சனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு, கோயில் நிர்வாக அதிகாரி சேகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.