Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம்; ... வவ்வால்களின் கூடாரமாகிய நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில்; பக்தர்கள் வேதனை வவ்வால்களின் கூடாரமாகிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி குங்கும, வில்வார்ச்சனை துவக்கம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் கோடி குங்கும, வில்வார்ச்சனை துவக்கம்

பதிவு செய்த நாள்

14 நவ
2023
05:11

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில்  கோடி வில்வார்ச்சனையும், கோடி குங்குமார்ச்சனையும் தொடங்கப்பட்டது. சாஸ்திரப்படி நூறு ருத்விக்களுடன் அர்ச்சனைகள் நடத்தப்பட்டன. இது குறித்து கோயில் வேத பண்டிதர் அர்த்தகிரி சாமி கூறியதாவது; உலக நன்மைக்காக சுவாமிக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்மனுக்கு கோடி குங்குமார்ச்சனையும் செய்யப்படுகிறது.

பவித்ரமான ( தெலுங்கு ) கார்த்திகை மாதத்தில் பரமேஸ்வரரை வில்வத்துடன் வழிபட்டால் கோடி பிறவிகளின் பலன்கள் கிடைத்து முக்தி கிடைக்கும் என்று புராணக் கதைகள் கூறுகின்றன. உலக நன்மைக்காக வாயு லிங்கேஸ்வரரின் கோடி வில்வங்களைக் கொண்ட அர்ச்சனை பூஜைகள் சாஸ்திரப்படி தொடங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் அர்ச்சகர் மற்றும் வேத பண்டிதர்கள் அர்த்தகிரி, மாருதி சர்மா மற்றும் ரித்விக்கள், அர்ச்சனைக்கு தீட்சை எடுத்தனர். முதலில் கலச ஸ்தாபன பூஜையும், பின்னர் வேத பண்டிதர்கள் சுவாமிக்கு கோடி வில்வார்ச்சனையும், அம்மனுக்கு கோடி குங்கும அர்ச்சனையும் செய்தனர். தினமும் இரண்டு காலங்களில் அர்ச்சனைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு, கோயில் நிர்வாக அதிகாரி சேகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar