வவ்வால்களின் கூடாரமாகிய நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில்; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2023 06:11
நயினார்கோவில்; பரமக்குடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் வவ்வால்கள் அடர்ந்து உள்ளதால், பக்தர்கள் துர்நாற்றத்தில் வேதனையுடன் சுவாமி தரிசனம் செய்து செல்லும் நிலை உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த நாகநாதசுவாமி கோயில், அறநிலையத் துறையினரால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் சுத்தம் செய்யும் பணிகள் தொடர்ந்து நிறைவேற்றாமல் பிரகாரம் முழுவதும் வவ்வால்கள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் திருக்கல்யாண மண்டபம் தொடங்கி, நாயன்மார்கள் சன்னதி, புற்றடி மற்றும் நவகிரக சன்னதிகளில் வவ்வால்களின் எச்சங்கள் உள்ளன. தினம்தோறும் இக்கோயிலுக்கு வரும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி மன நிறைவுடன் கோயிலை விட்டு வெளியேற முடியாமல் உள்ளனர். நயினார்கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஏராளமான உபகோயில்களுக்கு, இதன் மூலம் வரும் வருமானத்தில் மட்டுமே திருப்பணிகள் நடக்கிறது. ஆகவே பிரதானமாக உள்ள நாகநாத சுவாமி கோயிலின் தூய்மையை கருத்தில் கொண்டு, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.