இன்று எம துவிதியை; சகோதரி வீட்டில் சாப்பிடுங்க.. தீர்க்காயுளுடன் வாழுங்க!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 10:11
ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை எம துவிதியை என்றழைக்கப்படுகிறது. எம துவிதியை அன்று யமதர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப்பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும்.
இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு ஆசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார். அக்கா, தங்கை யாராக இருந்தாலும் அண்ணன், தம்பிகளை அன்போடு அழைத்து பாசத்தை பரிமாறுங்க. எமனை சந்தோஷப்படுத்துங்க. உடன் பிறந்த சகோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா பெரியம்மா பெண்கள், மாமா பெண், மற்றும் யாரை சகோதரியாக நினைக்கிறார்களோ அவர்களின் வீட்டிலும் உணவு அருந்தி ஆசீர்வாதம் செய்யலாம்!