திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ‘போனஸ்’ ; ஒவ்வொரு பணியாளருக்கும் வீட்டு மனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2023 11:11
திருமலை; திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு பிரம்மோற்சவ சன்மானம் வழங்க திருமலை திருப்பதி அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிரந்தர ஊழியர்களுக்கு 14 ஆயிரம் ரூபாயும், ஒப்பந்த ஊழியர்களுக்கு 6,850 ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, 20 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட்டள்ளது. மேலும் அலிபிரியில் பிரசாத மூலப்பொருட்களை சேமிக்க 11 கோடியில் குடோன்கள், மங்கலம் முதல் ரேணிகுண்டா வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு 15 கோடி ஒதுக்கீடு, 1.65 கோடியில் ஆயுர்வேத மருத்துவமனையில் புதிய கட்டிடம், பத்மாவதி கோயில், வெங்கடேஸ்வரா கோயில் கட்ட 15.54 கோடி, தகுதியான ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம், ஒவ்வொரு பணியாளருக்கும் வீட்டு மனைகளை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி தெரிவித்துள்ளார்.